சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் பண் - திருக்குறுந்தொகை (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=je0h4JOXJmk |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.062  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) ; (திருத்தலம் அருள்தரு சொர்ணபுரிநாயகியம்மை உடனுறை அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர் கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே. | [1] |
யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை, நாவின் நல் உரை ஆகிய நாதனை, தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே. | [2] |
அன்பனை, அடியார் இடர் நீக்கியை, செம்பொனை, திகழும் திருக்கச்சி ஏ- கம்பனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர் நம்பனை, கண்டு நான் உய்யப்பெற்றெனே. | [3] |
மா தனத்தை, மா தேவனை, மாறு இலாக் கோதனத்தில் ஐந்து ஆடியை, வெண்குழைக் காதனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர் நாதனை, கண்டு நான் உய்யப் பெற்றெனே. | [4] |
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து, என்னை ஆட்- கொண்டு, நல்-திறம் காட்டிய கூத்தனை; கண்டனை; கடுவாய்க்கரைத்தென்புத்தூர் அண்டனை; கண்டு அருவினை அற்றெனே. | [5] |
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட மைந்தனை(ம்), மணவாளனை, மா மலர்க் கந்த நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எந்தை ஈசனை, கண்டு இனிது ஆயிற்றே. | [6] |
உம்பரானை, உருத்திர மூர்த்தியை, அம்பரானை, அமலனை, ஆதியை, கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே. | [7] |
மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள் நேசம் ஆகிய நித்த மணாளனை, பூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் ஈசனே! என, இன்பம் அது ஆயிற்றே. | [8] |
இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே, கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்- படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே. | [9] |
அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை, திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர் இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே. | [10] |